அமைச்சர் ரிசாட்டிற்கு ஆதரவாக வலம்வருபவர்கள் இவர்களா!!

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பதவி விலக வேண்டும் மற்றும் ரிசாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகள் உட்பட பலரும் கோரி வருகின்றனர்.


இந்த நிலையில் ரிசாட் பதியுதீன் வகிக்கும் அமைச்சின் சிறப்பு இணைப்பாளராகவும், செல்லப்பிள்ளையாகவும் இருக்கும் கணேசமூர்த்தி இது தொடர்பில் வாய் திறக்காமல் இருப்பது கேள்விக்குறியே.

அதாவுல்லாவே இந்த விடயம் தொடர்பில் வெளிப்படையாக தெரிவித்துள்ளதுடன், மட்டக்களப்பிலுள்ள அனைவரும் இந்த விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் கணேசமூர்த்தி எதுவும் சொல்லவில்லை. அவர் உண்மையான தமிழர் என்றால் பதவியை எதற்காக வைத்திருக்கிறார்.

அத்துடன் பட்டிப்பளை பிரதேச செயலாளராக இருக்கும் ராகுலனாயகி ஊடாக ரிசாட்டிற்கு சட்டத்திற்கு முரணான வகையில் காணிகளை உறுதி பிடித்து கொண்டுத்துள்ளார் அவர்.

ராகுலனாயகி பிரதேச செயலாளராக இல்லாமல் கணேசமூர்த்தியின் பிரத்தியேக செயலாளராகவே செயற்பட்டு வருகிறார்.

அரச அதிகாரிகள் இவ்வாறு அரசியல்வாதிகளின் பின்னால் செல்கின்றமையானது மிகவும் வெட்கக்கேடான விடயமாகும்.

மக்களுக்கு எதிர்மாறான நிலைப்பாட்டினையே இந்த ராகுலன் கொண்டிருக்கிறார். இவர் வாகரையில் பிரதேச செயலாளராக இருந்த காலப்பகுதியில் ஹிஸ்புல்லாவிற்கு காணி வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரச அதிகாரிகளுக்கு தமிழ் காணிகள் வழங்கப்பட முக்கிய காரணகர்த்தாவாக இருந்தது ராகுலன் தான். இதனை அறிந்து கொண்ட ரிசாட், கணேசமூர்த்தி மூலம் விடுதலை புலிகளால் அப்போது பராமரிக்கப்பட்ட காணிகளை கையப்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் ஈடுபட்டிருந்தார்.

என்ற போதும் கூட இவ்வளவு நடந்தும் கணேசமூர்த்தி, எதற்கும் கருத்து கூறாமல் மற்றும் தன்னுடைய பதவியை துறக்காமல் ரிசாட்டுடன் ஒட்டி பிழைப்பதன் நோக்கம் என்ன?

அதேபோல வவுனியாவில் இருக்கும் சந்தேகத்திற்கிடமான தொழிற்சாலைக்கும் கணேசமூர்த்திக்கும் தொடர்பு இருப்பதாக புலனாய்வு தகவல் தகவல்கள் ஒருபுறம் தெரிவிக்கின்றன.

ஒட்டு மொத்தத்தில் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இவரும் உடந்தையாக இருப்பது தெளிவாகியுள்ளது.

எனவே அரச அதிகாரி என்ற போர்வைக்குள் அரசியல்வாதிக்கு வால் பிடிக்கும் கணேசமூர்த்தி மீது யார் நடவடிக்கை எடுப்பது?
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.