நீராடச் சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, வெல்லாவெளி வாய்க்கால் பகுதியில்  நீராடச் சென்றவர், நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி 35ஆம் கிராமத்தில் உள்ள நவகிரி வாய்க்கால் ஒன்றில் நேற்று மாலை ஆறு இளைஞர்கள் நீராடியுள்ளனர். இதன்போது குறித்த பகுதியில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று காலை குறித்த குடும்பஸ்தர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

களுவாஞ்சிகுடி குறுமண்வெளி பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய சு.சந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் காணாமல்போனமை குறித்து, அங்கிருந்த நான்கு இளைஞர்களும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.