தீ விபத்தால் பாதிப்புற்றோர் முகாமில் தங்கவைப்பு!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


அத்தோடு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை வர்த்தகர்கள், தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த லயன் குடியிருப்பில் நேற்று (புதன்கிழமை) இரவு சுமார் 9.30 மணியளவில்  ஏற்பட்ட தீ காரணமாக 24 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

இந்தத் தீ விபத்தினால் 21 குடும்பங்களைச் சேர்ந்த, 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களே தற்போது தலவாக்கலை ஹொலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.