இம்முறை மோடி பதவியேற்பில் புதுமை!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையொட்டி மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார் நரேந்திர மோடி.
நாடு முழுவதுமிருந்து பல்வேறு தலைவர்களும் தொழிலதிபர்களும் நடிகர்களும் இந்தியப் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளார்கள். இந்நிலையில் அமைச்சரவையில் இடம்பிடிக்கப் போகிறவர்கள் குறித்த ஆலோசனையில் நேற்றே அமித் ஷாவோடு மோடி ஈடுபட்டார்.

அப்போதிருந்து மோடியின் அமைச்சரவையில் பங்கு வகிக்கப் போகும் அமைச்சர்கள் யார் யார் என்ற கேள்விகள் மொத்த நாட்டிலுமே எழுந்துகொண்டிருந்தன. அந்த எதிர்பார்ப்புகளுக்கு பிரதமர் பதவி ஏற்கும்வரை தீர்வு கிடைக்காமலே இருந்தது.

தற்போது பிரதமர் பதவியை ஏற்றுவிட்டார். அதுவரை அவரும் பாரதிய ஜனதா கட்சியும், தம் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்று அறிவிக்கவே இல்லை. அமைச்சர்கள் பட்டியலை அறிவிக்காமல் நேரடியாகப் பிரதமர் பதவியை ஏற்றுள்ளார். இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர்கள் பற்றிய விவரங்களை அறிவிக்காமல் பிரதமர் பதவியை ஏற்றுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.