இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இந்த வருடத்தில் இது வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபா 3.8 சதவீதத்தினால் வலுவடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இந்நிலையில் , நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 174.16 ரூபாவாக அமைந்திருந்தது. இதன் விற்பனை விலை 178.11 ரூபாவாக காணப்பட்டது.

கடந்த வருடம் காலாண்டு பகுதியில் இலங்கையின் ரூபா அமெரிக்க டொலருக்கு அமைவாக வீழ்ச்சி அடைந்து வந்தது.

இந்த வருடத்தில் முதல் காலாண்டு பகுதியில் அடிக்கடி இலங்கை ரூபா இவ்வாறு பெறுமதி வீழ்ச்சி அடைந்த போதிலும் பொதுவாக ரூபாவின் பெறுமதி தற்பொழுது அதிரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவின் டொலருக்கு அமைவாக இலங்கை ரூபா குறுகிய காலத்தில் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் இந்த பின்னடைவில் தற்பொழுது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.