அசாஞ் உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்: ஐ.நா நிபுணர்!!

விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் ஜூலியன் அசாஞ் நீண்டகாலமாக உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை நிபுணர் நில்ஸ் மெல்ஸர் தெரிவித்துள்ளார்.


அசாஞ்-இன் மனித உரிமைகள் மீறப்படுமென்பதாலும் விசாரணைக்குத் தகுந்த நிலையில் அசாஞ் இல்லையென்பதாலும் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தவேணடாம் என பிரித்தானியாவை மெல்ஸர் வலியுறுத்தியுள்ளார்.

அசாஞ்-இன் விருப்பத்தை முறியடிப்பதற்காக பல ஜனநாயக நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் மெல்ஸர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மெல்ஸரின் அவதானிப்புகள் பலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நிராகரித்துள்ள பிரித்தானிய அரசாங்கம் பிரித்தானியா எந்தவொரு சித்திரவதைகளிலும் பங்கெடுக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.