மாணவர்களின் கைது எமது உரிமையை நசுக்கும் செயற்பாடாகவே உள்ளது!!
பல்கலைக்கழக மாணவர்களின் கைது நடவடிக்கை நாம் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கும் ஒரு அச்சமான சூழலை உருவாக்கியுள்ளதாக காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவசரகாலச் சட்டம் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடே கொண்டுவரப்பட்டது எனத் தெரிவித்துள்ள உறவுகள் பல்கலைக் கழக மாணவர்களை உடன் விடுவிக்குமாறும் கோரியுள்ளனர்.
முல்லைத்தீவில் (சனிக்கிழமை) காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன் பொது அவர்கள் தெரிவிக்கையில்,
“அவசரகாலச் சட்டம் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடே கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களும் தமிழருக்கான உரிமையை தான் கேட்கின்றார்கள். போராடுகின்றார்கள். அவ்வகையிலே, நாமும் எமது உரிமையை கேட்டே போராடுகின்றோம்.
அத்துடன், எமது பிள்ளைகளை அரசாங்கத்திடம் அல்லது இராணுவத்தினரிடம் தான் ஒப்படைத்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் நாம் எமது பிள்ளைகளை அரசாங்கத்திடம் கேட்டு போராட்டம் நடத்துகின்ற நிலையில் எமக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் கைதுகளுக்கு பின்னர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி யுத்தகாலத்தில் நாம் எப்படி அச்ச நிலையில் இருந்தோமோ அந்த அச்ச நிலையை இப்போது மீண்டும் உணர முடிகிறது. எனவே, எமது போராட்டத்துக்கு எந்தவொரு இடையூறையும் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்துகின்றோம்.
இதனிடையே, எமது உரிமைகளுக்காக நியாயம் கேட்டுப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்ற வகையில் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக நசுக்கும் செயற்பாடாகவே இந்த மாணவர்களின் கைது அமைந்துள்ளது. எனவே எமது பல்கலைக்கழக மாணவர்களை எந்தவொரு பாதிப்பும் இன்றி உடன் விடுதலை செய்ய வேண்டுமென்றும் நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்” என்று தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அத்துடன், அவசரகாலச் சட்டம் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடே கொண்டுவரப்பட்டது எனத் தெரிவித்துள்ள உறவுகள் பல்கலைக் கழக மாணவர்களை உடன் விடுவிக்குமாறும் கோரியுள்ளனர்.
முல்லைத்தீவில் (சனிக்கிழமை) காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன் பொது அவர்கள் தெரிவிக்கையில்,
“அவசரகாலச் சட்டம் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடே கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களும் தமிழருக்கான உரிமையை தான் கேட்கின்றார்கள். போராடுகின்றார்கள். அவ்வகையிலே, நாமும் எமது உரிமையை கேட்டே போராடுகின்றோம்.
அத்துடன், எமது பிள்ளைகளை அரசாங்கத்திடம் அல்லது இராணுவத்தினரிடம் தான் ஒப்படைத்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் நாம் எமது பிள்ளைகளை அரசாங்கத்திடம் கேட்டு போராட்டம் நடத்துகின்ற நிலையில் எமக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் கைதுகளுக்கு பின்னர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி யுத்தகாலத்தில் நாம் எப்படி அச்ச நிலையில் இருந்தோமோ அந்த அச்ச நிலையை இப்போது மீண்டும் உணர முடிகிறது. எனவே, எமது போராட்டத்துக்கு எந்தவொரு இடையூறையும் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்துகின்றோம்.
இதனிடையே, எமது உரிமைகளுக்காக நியாயம் கேட்டுப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்ற வகையில் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக நசுக்கும் செயற்பாடாகவே இந்த மாணவர்களின் கைது அமைந்துள்ளது. எனவே எமது பல்கலைக்கழக மாணவர்களை எந்தவொரு பாதிப்பும் இன்றி உடன் விடுதலை செய்ய வேண்டுமென்றும் நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்” என்று தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை