கதவு உடைப்பு: நடுவருக்கு என்ன தண்டனை?
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் அரங்கத்தில் நடுவர்களின் அறைக் கதவை உடைத்த விவகாரத்தில் நடுவர் நைஜல் மீது நடவடிக்கை இல்லை என இந்திய கிரிக்கெட்வாரியம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் நடுவர்களின் தீர்ப்பு பல நேரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
முன்னதாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியின் போது பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆட்டம் முடிந்தபின்னரே கடைசி பந்தை மலிங்கா நோ பாலாக வீசியது தெரியவந்தது. களத்தில் உள்ள நடுவரின் கவனக் குறைவால் அது நோ பாலாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை அது நோ பாலாக அறிவிக்கப்பட்டு ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்க வாய்ப்பு உண்டு.
மே 4ஆம் தேதி பெங்களூரு அணி தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியின் போது உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரின் போது நோ பால் அறிவிக்கப்பட்டதில் களத்தில் இருந்த நடுவர் நைஜலுக்கும் கேப்டன் விராட் கோலி, உமேஷ் யாதவ் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டி முடிந்து கோபத்தில் பெவிலியன் சென்ற நைஜல் நடுவர்களின் அறைக் கதவை எட்டி உதைத்துள்ளார். இதனால் கதவு பழுதுபட்டுள்ளது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையாக 5000 ரூபாயை வழங்கினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக மூத்த கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில், “ஐ.பி.எல். போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர்தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இதோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் நடுவர்களின் தீர்ப்பு பல நேரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
முன்னதாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியின் போது பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆட்டம் முடிந்தபின்னரே கடைசி பந்தை மலிங்கா நோ பாலாக வீசியது தெரியவந்தது. களத்தில் உள்ள நடுவரின் கவனக் குறைவால் அது நோ பாலாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை அது நோ பாலாக அறிவிக்கப்பட்டு ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்க வாய்ப்பு உண்டு.
மே 4ஆம் தேதி பெங்களூரு அணி தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியின் போது உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரின் போது நோ பால் அறிவிக்கப்பட்டதில் களத்தில் இருந்த நடுவர் நைஜலுக்கும் கேப்டன் விராட் கோலி, உமேஷ் யாதவ் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டி முடிந்து கோபத்தில் பெவிலியன் சென்ற நைஜல் நடுவர்களின் அறைக் கதவை எட்டி உதைத்துள்ளார். இதனால் கதவு பழுதுபட்டுள்ளது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையாக 5000 ரூபாயை வழங்கினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக மூத்த கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில், “ஐ.பி.எல். போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர்தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இதோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை