இந்தியாவின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்த ஐ.எஸ் அமைப்பு?

இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், குறித்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள பகுதிக்கு "வில்லாயா ஆஃப் இந்த்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செய்தி நிறுவனமான Amaq News Agency வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டி ரொயிட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் அதற்கு தங்கள் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காஷ்மீர் - ஷோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் பெரும் துப்பாக்கி சண்டை இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருக்கமான உறவு வைத்திருந்த இஷ்ஃபக் அகமது ஷோபி கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துருந்தது.

இந்நிலையிலேயே, இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்துவிட்டதாக ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அண்மையில், இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்த நிலையில், தற்போது இவ்வாறு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.