கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளருக்கு இடமாற்றம்!!

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நிர்வாக மேம்படுத்தல் நடவடிக்கையின் ஒருபகுதியாக மருத்துவ நிர்வாகத் துறையில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் இம்மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட 146 புதிய நியமனங்களை அடுத்து இரண்டாவது கட்டமாக இன்றையதினம் மேலும் 30 மருத்துவ நிர்வாகத் துறை நியமனங்கள் நாளையிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகள் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று செல்கின்றார்.

இவர் கிளிநொச்சியில் கடமையாற்றிய குறுகிய காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திகளை வைத்தியசாலையில் மேற்கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மேற்படி நியமனங்களுக்கு அமைவாக வவுனியா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் க.செந்துராபதிராஜா மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று செல்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.