மைத்திரி, ரணில், மஹிந்தவிற்கு புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அரச புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொலை செய்ய திட்டம் மேற்கொள்ளப்படுவதால் அரசியல் தலைவர்களை அடுத்த சில மாதங்களிற்கு ஒன்றாக பயணம் மேற்கொள்ளவேண்டாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து மீண்டும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை  விடுத்துள்ளனர்.

அந்தவகையில் கத்தோலிக்க தேவாலயங்கள், ஆலயங்கள் உட்பட ஏனைய வழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வு பிரிவினர், அவ்வாறான இடங்களிற்கு செல்லவேண்டுமாயின் உலங்கு வானூர்திகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.