இந்திய இராணுவத்தால் கூட விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய முடியவில்லை!!

இந்திய இராணுவத்தால் கூட விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய முடியாமல் போனது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பல்வேறு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்ட எமது இராணுவம் இறுதியாக வெற்றி இலக்கை அடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு துறையிடம் உள்ளது.

இலங்கையானது நீண்டகால யுத்தத்துக்கு பழகிய நாடாகும். 30 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் வெற்றிக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா தமது படையினரை அனுப்பி இருந்த போதும், அவர்களால் வெற்றிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் எமது நாட்டு இராணுவம் விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சமாதானமாக இருந்த போதும், கடந்த மாதம் 21ம் திகதி மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாதமானது, உள்நாட்டு பயங்கரவாதம் அன்றி, சர்வதேச பயங்கரவாத நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனை முறியடிப்பதற்கும் இலங்கையின் முப்படையினருக்கும், பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவுக்கும், சிவில் பாதுகாப்பு தரப்பினருக்கும் இயலுமை உண்டு.

நாட்டில் யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்காக தங்களது உயிர்நீத்த படையினருக்கு தமது கௌரவத்தை செலுத்துவதாகவும்” ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.