வடக்கு ஆளுநா் முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்திப்பில் நடந்தத என்ன??

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனுக்கும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கைதடி முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.


மக்கள் பிரதிநிதிகளாக வடமாகாண சபையில் பணியாற்றிய இந்த மக்கள் பிரதிநிதிகள் தற்போது முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்த ஆளுநர் அவர்கள், வடமாகாண சபை தற்போது இயங்காத நிலையில் வடமாகாணத்தின் ஆளுநராக தான் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆளுநர்  இதன்போது விளக்கமளித்தார்.

அத்துடன் வடமாகாண மக்கள் மிகப்பிரதானமாக எதிர்நோக்கும் பிரச்சினையான காணி மற்றும் நீர்ப் பிரச்சினையை தீர்த்துக் வைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் நாளாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் காணப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது முன்னாள் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை ஆளுநருடன் பகிர்ந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.