வெசாக் கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறுமென அறிவிப்பு -ரணில்!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தி அந்த கொண்டாட்டங்களை குழப்பியடித்தனர்.
அதேபோல் இங்குள்ள வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு வெசாக் கொண்டாட்டங்களை குழப்பியடிக்க இடமளிக்க முடியாது. நேற்றைய தினம் அமைச்சர்களின் கூட்டத்தின் போது இது தொடர்பில் தீரி்மானத்தையும் நிறைவேற்றினோம். அதற்காக இந்த குழப்பங்களை தடுத்து அமைதியை பாதுகாக்கத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் பொலிசாருக்கும்,இராணுவத்தினருக்கும் வழங்கியுள்ளோம்.

முப்படைத் தளபதிகளும் பொலிஸ்மா அதிபரும் இது தொடர்பில் நேற்றைய தினம் அறிவித்தல்களையும் விடுத்திருந்தனர். அப்பாவி மக்களை துன்புறுத்தி வெசாக் கொண்டாட்டங்களை குழப்பியடிக்க இடமளிக்க ஒருபோதும் முடியாது. இம்முறை வெசாக் பண்டிகையை அமைதியாக நடத்த வேண்டியது அவசியம். தேவைப்படும் இடங்களின் பாதுகாப்பிற்கு பொலிசாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பை வழங்குபவர். அதனால், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிசாருக்கும், முப்படையினருக்கும், விசேட அதிரடிப்படையினருக்கும் தேவையான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் பிரதமர் ரணில் அங்கு மேலும் தெரிவித்துள்ளார் .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.