வடக்கு ஆளுநா் முன்மாதிாி தீா்மானம் என்ன??

நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு

வடமாகாண பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கௌரவ ஆளுநர் பொலிசாரின் தேவைக்கு தற்காலிகமாக வாகனங்களை வழங்கும் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் இரண்டு வாகனங்கள் அவசர நிலைமையில் பொலிசார் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் காணப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக வடமாகாண சபைக்கு சொந்தமான மூன்று வாகனங்களும்

பொலிசாரின் அவசர தேவைகளுக்காக தற்காலிகமாக வழங்கப்படவுள்ளது. பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வடமாகாணத்தின் பொதுமக்களை ஆளுநர் கோரியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.