அமைதிவழி போதனைகளை போதிக்கும் இடங்களில் ஆயுதங்கள் எதற்கு என கேள்வி??

மத மற்றும் அமைதி வழி போதனைகளை போதிக்கும் இடங்களில் ஆயுதங்களை வைத்திருப்பது மத கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பள்ளிவாசல்களில் இருந்து மீட்கப்படும் ஆயுதங்கள் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் காணப்படுகின்றன.

ஆயுதங்கள் பள்ளிவாசலின் சுற்றுச்சூழலை துப்பரவு செய்ய வைத்திருப்பதாக முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் குறிப்பிடுவது பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்துகின்றது.

தீவிரவாதத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

முஸ்லிம் பள்ளிவாசல்களில் பொருத்தமற்ற விதமாக ஆயுதங்களை வைத்திருந்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத மற்றும் அமைதி வழி போதனைகளை போதிக்கும் இடங்களில் ஆயுதங்களை வைத்திருப்பது மத கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளே இன்று தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தியுள்ளது.

ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடுகள் இன்று இஸ்லாத்தின் புனித தன்மையினை கேள்விக்குறியாக்கியுள்ளமை வருத்தத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News #Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Vavuniya  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.