வடஅயர்லாந்தின்(DUP) சிரேஷ்ட உறுப்பினர்களை பிரதமர் தெரேசா சந்திப்பு!!

வடஅயர்லாந்தின் ஜனநாயக தொழிற்சங்க கட்சியின் (DUP) சிரேஷ்ட உறுப்பினர்களை பிரதமர் தெரேசா மே நேற்றையதினம் (வியாழக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜனநாயக தொழிற்சங்க கட்சியின் (DUP) தலைவர்களான ஆர்லீன் பொஸ்டர், நைஜல் டொட்ஸ் மற்றும் சிரேஷ்ட உறுப்பினரான ஜெஃப்ரி டொனால்ட்சன் ஆகியோரை நேற்று பிற்பகல் பிரதமர் சந்தித்துள்ளார்.

வடஅயர்லாந்தில் அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசாங்கமொன்று மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு இந்த சந்திப்பு பயன்பட்டதாக DUP தெரிவித்துள்ளது.

மேலும் பிரெக்ஸிற், நாட்டை வளப்படுத்தும் வகையில் அமையவேண்டும் என்பதை இச்சந்திப்பின்போது பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் DUP
தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.