முள்ளிவாய்க்கால் பேரவலம்.பிரித்தானியாவில் 3ஆம் நாள் போராட்டம்.!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு 3வது நாளாக தொடரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!ஸ்ரீலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரமானது 11.05.2019 அன்று பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது.
என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனையை ஒவ்வொரு ஈழத்தமிழரும் நினைவில் நிறுத்தி இந்த முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரத்திலும் 18.05.2019 மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும் நினைவெழுச்சிப் பேரணியிலும் கலந்துகொண்டு தமிழீழம் நோக்கி வீறுகொண்டெழுவோம். என்னும் செய்தியினை மக்களுக்கு கூறிக்கொண்டு மாலை 6 மணிக்கு அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு ரகு அப்பா அவர்கள் தமிழீழ உணர்வாளர்களான டென்சிகா, சுஜீவன், பாலகிருஷ்ணன், நிரோச்குமார் ஆகியோருக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து திரு வசந்தன் அவர்கள் உறுதிமொழி எடுக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமானது மாலை 6 மணி அளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo





.jpeg
)





கருத்துகள் இல்லை