பயங்கரவாத அரச செயல்பாடும் மகிந்த அரசியலிலும்!!

பயங்கரவாத செயற்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசாங்கம் துணைபோயுள்ளது. இந்நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியினர் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”தொடர் குண்டுத் தாக்குதலை தடுப்பதற்கு அறிவுறுத்தல் கிடைத்தும் அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இனவாத தாக்குதலுக்கும் அரசாங்கம் துணைபோயுள்ளது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பிரதமரும் ஜனாதிபதியும் தமது கடமையை நிறைவேற்றாது இருந்ததன் ஊடாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோயுள்ளனர் என்பது உறுதியாகின்றது. இந்நிலையில் அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய தேவை ராஜபக்ஷவின் எதிர்க்கட்சிகே உள்ளது. ஆகையாலேயே அமைச்சர் ஒருவருக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளனர். ஆனால் நாம் அரசாங்கத்துக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளோம்” என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.