காரில் இறைச்சி கடத்திய துருக்கியர் கைது!!

சுவிட்சர்லாந்தின் ஜூரா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர்.

அந்த கார் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது.

காரின் பின் பகுதியை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் ஏராளமான இறைச்சி இருப்பதைக் கண்டனர்.


கிட்டத்தட்ட 300 கிலோ இறைச்சி அந்த காரில் இருந்தது.

காரில் இறைச்சியை கடத்த முயன்ற அந்த 29 வயது துருக்கியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது சுங்கம் தொடர்பான குற்றங்கள் மற்றும் உணவு கடத்தல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த நபர், கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கபாப் ஆகியவற்றை தனது காரில் கடத்தும்போது பிடிபட்டார்.

கைப்பற்றப்பட்ட இறைச்சி அழிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.