வன்முறையில் கைதான 46 பேருக்கு பிணை விடுதலை!!

மாரவில மாவட்ட நீதவான் சிறிமெவன் மஹேந்திர ராஜா முன்னிலையில், சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளார்.


நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர் இன்று (29) சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.நால்வர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இம் மாதம் 13 ஆம் திகதி, நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த அதேவேளை, மற்றுமொருவர் பாரிய வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மினுவங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 19 பேர் இன்று மினுவாங்கொட மாவட்ட நீதிவான் கேசர சமரடிவஹர முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தலா 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.