ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே வன்முறைகள் அரங்கேறுகின்றன!!

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று வன்முறைகளை ஏற்படுத்தும் அரசியல் சூதாட்டமே தற்போதும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


கண்டி குண்டசாலை கோணவெல தெற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இசுரு உயன்புர எழுச்சிக் கிராமம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “திரைப்படக் காட்சிகளைப் போன்றே இன்று இலங்கை அரசியலில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவை வெறும் நடிப்பு மாத்திரமே. இதனால் எவ்வித சேவைகளும் மக்களுக்கு இடம்பெறபோவதில்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது காலத்தின் தேவையாகும். இது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும். ஆனால், மக்களின் பிரச்சினைகளுக்கு எவரும் முன்னுரிமையளிப்பதில்லை. நாட்டை தீ வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் சூதாட்டமே நடைபெற்று வருகிறது.

83ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று சில அரசியல் குழுக்கள் நாட்டுக்கு சேதங்களை விளைவித்தேனும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். எதிர்வரும் தேர்தல்களில் தெரிவாகும் ஜனாதிபதியும் பிரதமரும் யார் என்ற அரசியல் சூதாட்டம் அரங்கேற ஆரம்பித்துள்ளது. இது நாட்டுக்கு பெரும் பாதகமாகும்” என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.