வவுனியாவில் பனைசார் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

வவுனியாவில், பனை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிலையம் இன்று (சனிக்கிழமை) கைத்தொழில் கூட்டுறவு நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் புத்திக பத்திரணவினால் திறந்து வைக்கப்பட்டது.


வவுனியா, ஓயார் சின்னக்குளம் கிராமத்தில் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட இக் கட்டடத்தொகுதியானது துளசி பனைபொருள் சார்ந்த உற்பத்தி நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ளதுடன் பனையோலை உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்குமான நிலையமாக செயற்படவுள்ளது.

பனம்பொருட்கள் உற்பத்தி கிராமம் என்ற தொனிப்பொருளில் அரும்பொருட் கலையத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு அருங்கலை வளர்ச்சிக்கான உந்துதலாக அமையவுள்ளள இந்த நிலையத்தினை பிரதி அமைச்சர் புத்திக பத்திரண திறந்து வைத்ததுடன் கைத்தொழில் உற்பத்தி பொருட்களையும் வழங்கி வைத்தார்.

கிராம மட்டத்தில் இருந்து கைத்தொழில் உற்பத்தியை பெருக்கி வருமானத்தினை ஈட்டும் நோக்கோடு ஆரம்பித்து வைக்கப்படும் இந்நிலையத்தின் திறப்பு விழாவில் தேசிய அருங்கலை பேரவையின் பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர்கள், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.