மீண்டும் போட்டியிடும் மைத்திரி!!
இதற்கு அமைய கடந்த 27 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை துரிதமாக நிறைவு செய்யுமாறு, ஜனாதிபதி செயற்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்பதால், பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணக்கத்தை ஏற்படுத்த முடியாது போனால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவது தொடர்பாக இதுவரை மத்திய செயற்குழுவில் யோசனை முன்வைக்கப்படவில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை