மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் மாயம்!!

காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


காரைநகர் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரன் குப்பிரியன் (வயது 23) மற்றும் தவராசா சத்தியராஜ் (வயது 26) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் காரைநகர் வடக்கு கடற்பரப்பில் நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

அன்று சென்ற இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை வீடு திரும்பாத நிலையில், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அதேவேளை, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை மற்றும் மீன்பிடி அமைச்சிலும் மீனவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.