கிழக்கில் ஊடகவியலாளரை அச்சுறுத்திய தவிசாளர்!!

ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பாக வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஷோபா ஜெயரஞ்சித்திற்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 05ஆம் திகதி இரவு 11 மணியளவில் கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தவிசாளரின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்விசாரணை கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடந்த 06ஆம் திகதி மாலை நடைபெற்றுள்ளது.

இதன்போது பொலிஸ் நிலையத்தில் சாட்சியம் அளித்து விட்டு வீடு திரும்பிய வாழைச்சேனையைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளரை ஷோபா தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஷோபாவிற்கு எதிராக ஊடகவியலாளர் நேற்று கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.