குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஹற்றனில் விசேட பிரார்த்தனை!

கடந்த ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அந்த தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.


இந்த பிரார்த்தனை நிகழ்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றன் திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுத்தலுடன் நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத் தந்தை வணக்கத்துக்குரிய அருட்தந்தை நியூமன் பீரிஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மத்திய மாகாண ஆயர் அதி வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் வியானி பெர்னாண்டோ கலந்துகொண்டு விஷேட பூஜையையும் திருப்பலி ஒப்புக் கொடுத்தலையும் நடத்தினார்.

குண்டுத் தாக்குதலில் ஹட்டன், தலவாக்கலை, மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்த சிக்கி உயிர்நீத்தவர்களின் உறவினர்களும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிப்பாடுகளில் ஈடுபட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.