ஞனாசார தேரரின் புலிப்பாசமும் ..!!இரட்டை வேடமும்.!!

எனது முக நூல்  பதிவுகளை பார்த்த. முஸ்லிம்  நண்பர்கள் என்னை  எவ்வளவுக்கெவ்வளவு திட்ட. முடியுமோ அவ்வளவுக்கெவ்வளவு திட்டித்த்தீர்த்திருந்தார்கள்   என்னை கடைந்தெடுத்த தமிழ் இனவாதியென்றும்  முஸ்லிங்களின் எதிரியென்றும்   திட்டியிருந்ததார்கள்  ஆஹா நான் அவர்கள் பார்வையில் அப்படியெ இருக்கட்டும்  நான் எனது இலக்கு எதோ அதில் குறியாய்யிருக்கிறேன்   சரி  அது ஒரு புறத்தில்லிருக்கட்டும்  இப்போது விடையத்திற்க்கு செல்வோம்  ..


 இன்று  சிங்களவர்கள் சிங்கள இனவாதிகள். சிங்களத் தலைவர்களென்று  எல்லாச் சிங்களவர்களுக்கும் புலிப்பாசம் பொங்கிவழிகிறது   தமிழர்கள்  கூட இவ்வளவு பாசம் புலிகள் மீது வைந்திருந்திருப்பார்களோ  தெரியவில்லை  ஆனால் சிங்ள அரசியல்வாதிகளிடமும் சிங்களத் தலைவர்களிடமும்  புலிப்பாசம் காட்டாறாய் பெருக்கெடுத் து ஓடுகிறது காடுகளை அழித்து குடியேற்றங்களை செய்வதற்க்கு அனுமதிகொடுத்து விட்டு   இப்போது சிங்களத் தலைவகள் மேடையில் பேசுகிறார்கள்  பிரபாகரனும் புலிகளும்  இருந்திருந்தால்  காடுபாதுகாப்பாக இருந்திருக்கும்மென்றும்  ஒரு கதியாலையோ வரிச்சுத்தடியையோ எவரும் வெட்டிச் செல்லமுடியாதெங்கிறார்கள்.

  அப்படியென்றால்  காடழிக்க அனுமதி கொடுக்கும் போது சிங்களத் தலைவர்களுக்கு தெரியாத காடுகளைஅழித்தால்  நாட்டில் மமைவீழ்ச்சி ஏர்படுமென்று  இலங்கையின் வனாந்தரங்களை  புலிகள்தான் காப்பாற்றுகிறார்கள்ளென்றால்  ஏன்  வனத்திலிருந்து வனவாசம் செய்த புலிகளை சிங்கள அரசுகள்  அழித்தன. இன்று சிங்களத் தலைவர்கள் தாங்கள்  செய்த செய்கிற ஒவ்வரு தவறுகளுக்கும். ஒவ்வொருவிதமாக.  மன ஆறுதலை  தேடிக்கொள்ள எண்ணுகிறார்கள் போலிருக்கு  அதுக்கிசைவாக. இனவாதிகளையும்  புத்ததுறவிகளையும் உசுப்பேற்றிவிடுவது  ஆதாவது இனவாதிகளும் புத்தபிக்குகளும்  எந்தந்த விடையகளுக்கெல்லாம்  நற்சான்றிதழ் கொடுத்து பேசுகிறார்களோ  ??

அதற்க்கெல்லாம்  சிங்கள அரச தலைவர்கள்    ஆதரவு போல் நடிப்பார்கள்  ஏன்னெனில் இவர்களை  ஆட்டிவிப்பவர்கள் இந்த சிங்கள அரச தலைவர்கள்தான்   அவர்களுக்கு எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ   அப்போது இவர்களை  நுள்ளிவிடுவார்கள்   வேலை முடிந்தவுடன் அவர்களும் அந்தந்த இடங்களுக்கு போய்விடுவார்கள்  எப்போது மீண்டும் சிங்கள அரச தலைவர்கள்  தெவையேற்படுதோ அப்போது அவர்கள் அரங்த்தில் தோன்றுவார்கள்  எல்லாமே சிங்கள அரச தலைவர்களின் நிரல்தான்  ஒரு சிங்களம் சொல்லும்  தமிழர்களுக்கு  எல்லா உரிமைகளையும் கொடுகங்கள்ளென்றும் இன்னொரு சிங்களம்  சொல்லும்  எதையும் தமிழர்களுக்கு  கொடுக்காதே என்றும்    மற்ற சிங்ளம்  இன்னும் ஒருபடிமேல்லெற்றி  ஊர் ஊராக ஊர்வலம் போகும்    அடுத்த  சிங்களம்தான் ஆபத்தானா சிங்ளம்  அது உண்ணாவிரதம் இருக்க தொடங்கி விடும்  எல்லாச்  சிங்கங்களும் ஒன்று சேர்ந்துவிடும்   


இந்த. அற்புதங்களையெல்லாம் செய்விக்கிற சிங்கள அரச தலைவர்கள்  கடைசியில்  எம்மால் ஒன்றும்  செய்ய முடியாது முழுச்சிங்களவர்களும் எதிக்கிறார்கள் எதையும் தரமுடியாதென்று கையைவிரித்து விடும்   ஆனா ல் அடுத்த மேடையில் பேசும்போது சிங்களம் சொல்லும்  எல்லாவற்றையும் இனவாதிகள் கெடுத்துவிட்டார்கள்   இப்போது தராவிட்டாலும் எப்போதாவது தருவோம்  இனவாதிகளும் அவர்களே அகிம்ஷாவாதிகளும் அவர்களே   கொலையாளிகளும் அவர்களே நீதிபதிகளும் அவர்களே   அனைத்துக்கும் மொத்த உருவமாய் இருப்பவர்கள் சிங்கள அரச தலைவர்களே   இன்று சிங்களவர்களுக்கும் இனவாதிகளுக்கும் சிங்கள அரச தலைவர்களுக்கும்    தமிழர்கள் மீதும் புலிகள் மீதும் ஏன் இந்த திடீர்பாசம்   அதாவது   இன்று முஸ்லிங்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ    இதே நிலையில் அன்று தமிழர்கள் இருந்தார்கள்   தமிழர்களின்   அன்றயவழர்ச்சியை  போறுமை கொள்ளமுடியாத. சிங்கள அரச தலைவர்களும்  அரச இயந்திரமும் தமிழருக்கு எதிராக இனவாதத்தையும் இனப்போரையும் ஏவிவிட்டது



  இதற்க்கு தனக்கு உதவியாக. முஸ்லிங்களையும் இணைத்துக்கொண்டது சிங்களம்   ..  அன்று தமிழர்களுக்கு என்நிலை வந்ததோ அன்நிலை இன்று முஸ்லிங்களுக்கு வந்துள்ளது      அன்று தமிழர்கள் இந்த நாட்டின் எதிரி என்றார்கள்  முஸ்லிங்கள் தேசபக்தர்கள் என்றார்கள்  இன்று தமிழர் தேசபக்தர்கள் என்கிறார்கள்  முல்லிங்கள் எதிரிகள் என்கிறார்கள்   அன்று  தமிழருக்கெதிராக முஸ்லிங்களை கூட்டுச் சேர்த்தார்கள் இன்று முஸ்லிங்களுக்கு எதிராக. தமிழர்களை கூட்டுச் சேர்க்கிறார்கள்    தமிழர்கள் அவர்களுடன்  இணைந்து விட்டால் நிலைமை என்னாகும்  என்பதனை மிகத் தெளிவாக சிங்கள அரச தலைவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்

 அதனால்தான்  தாங்கள் புலிகள் மீதும் தமிழர்கள் மீதும் பாசம்பொழிவதை விட. இனவாதிகளையும் புத்த மதவாதிகளையும்   தேரோக்களையும்    ஞானசாரர்களையும்    வைத்து புலிகள்மீதும் தமிழர்கள்மீதும்   பாசமழையை பொழியவைத்து  தங்கள் பக்க நியாயங்களுக்கு   தமிழர் ஆதரவை தேடிக்கொள்வதுதான்  சிங்கள அரச தலைவர்கள் போட்ட கணக்கு  அவர்கள் ஏவி விட்ட ஏவல்கள்தான் இந்த ஞானசாரதேரோக்கள்   .புலிகளை எப்போது அழிக்க வேண்டும் எதுவரைக்கும் வளரவிட வேண்டும் என்பதெல்லாம் உலக வல்லரசுகள் போட்ட கணக்கு  அது சிங்களம் போட்ட கணக் அல்ல.   எப்போது சிங்களத்தால்  புலிகளை  அழிக்க. முடியாதோ அப்போது  உலக வல்லரசுகள்  புலிகளை அழித்து க் கொடுப்பது   ஆனால் அழிப்பதற்க்கு முன்பு  எதையெல்லாம் ஒப்பந்தமாக எழுதிவாங்க முடியுமோ அனைத்தையும் எழுதி வாங்கிவிடுவது  வாங்கிவிட்டு புலிகளை அழித்துக் கொடுப்பது    அழித்துமுடிய. சிங்களம்  தங்களுக்கு தண்ணிகாட்டினால் என்ன செய்ய வேண்டும்மென்பதையும் உலக வல்லரசுகள்  ஒரு கணக்குப் போட்டுவைத்திருந்தன.


அதெபோல்  புலிகளை அடித்து அழித்துமுடிய. உலக வல்லரசுகளை எப்படி ஏமாற்ற வேண்டும்மென்று சிங்களமும் ஒரு கணக்குப் போட்டுவைத்திருந்தது  ஆனால் சிங்களத்தின்  கணக்கு தோற்றுவிட்டது  உலக வல்லரசுகளின் கணக்கு வென்றுவிட்டது   இப்போது உலக வல்லரசுகளிடம்  விழிபிதுங்கி  நிற்க்கிறது சிங்களம் அதனால்  மன ஆறுதலுக்காக.  ஏன்ரா புலிகளை அழித்தோம்மென.  அது தனது மார்பில் அடித்து அழுகிறது   அந்த அழுகயை தமிழர்களுக்கு  சார்பான அழுகையாக மாற்றியுள்ளது  புலிகள் இருந்தால்  இரண்டு சிங்கள கட்சிகளில் ஏதாவதொன்றுக்கு  மாறி மாறி சிங்களவர்கள் வாக்களிம்பார்கள்   புலிகளை அழித்ததால்  இப்போது அந்த வாய்ப்பும்  பறிபோய்விட்டுதே பாவம் சிங்கள. அரச தலைவர்கள்  இப்படி எல்லாவற்றையும் நினைத்து நினைத்து புலிகள் மீது அன்பு மழைபொழிகிறார்கள் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.