கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் முன்னிலை!

பிரபல பாதாள உலக குழுவின் உறுப்பினர் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிபான இம்ரான் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


கடந்த மே மாதம் 8ஆம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராக கொலை, கொள்ளை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் இருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

பிரபல பாதாள உலக குழுவின்  தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு அரசால் நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தியபோது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளின்போதே பல உண்மைகளை அவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.