பிரசவம் இடம்பெற்று சில நிமிடத்தில் பரீட்சை எழுதிய பெண்!

எத்தியோப்பியாவில் பெண்ணொருவர் ஓர் ஆண் குழந்தையை பிரசவித்த அரை மணி நேரத்துக்கு பின் மருத்துவமனை படுக்கையிலேயே தனது பரீட்சை வினாத்தாள்களுக்கு பதில் எழுதியுள்ளார்.


21 வயதான அல்மாஸ் டெரீஸ் என்ற பெண் மேற்கு எத்தியோப்பியாவில் வசித்து வசிகின்றார். கர்ப்பிணியாக இருந்த போது பிரசவம் நடப்பதற்கு முன்னரே பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ழான் பண்டிகை காரணமாக அவரது உயர்நிலைப் பாடசாலைப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன

கடந்த திங்கட்கிழமை அவருக்கு பரீட்சைகள் இடம்பெறுவதற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது பரீட்சைகளை எழுதினார்.

”கர்ப்பிணியாக இருக்கும்போது படிப்பது ஒன்றும் பிரச்சினையாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு வரை நான் தேர்ச்சி பெற காத்திருக்க விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை அவர் மருத்துவமனையில் வைத்தே எழுதியுள்ளார். நேற்றும் இன்றும் இடம்பெற்ற பரீட்சைகளை அவர் பரீட்சை மையத்திற்கு சென்றே எழுதியுள்ளார்.

”எனக்கு பிரசவம் ஒன்றும் அவ்வளவு கடினமான இருக்கவில்லை ஆகையால் நான் அவசரமாக பரீட்சை எழுத அமைர்ந்தேதேன்” என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் தனது மனைவியை பரீட்சை எழுதுவதற்கு அவர் கற்ற பாடசாலையை இணங்கச் செய்ததாக அல்மாசின் கணவர் தடீஸ் துலு தெரிவித்தார்.

எத்தியோப்பியாவில் உயர்நிலைப் கல்வியை இடையில் கைவிட்டுவிட்டு பின்னர் கல்வியை நிறைவு செய்வது அங்குள்ள பாடசாலை மாணவிகளிடம் பரவலாக காணப்படும் விஷயமாக உள்ளது. அல்மாஸ் தற்போது கல்லூரியில் சேர்வதற்கான இரண்டு வருட கல்வியை நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அல்மாஸ், பரீட்சைகளை சிறப்பாக எழுதியிருப்பதாகவும் தனது ஆண் குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்..
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.