சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003 அன்று விடுதலைப்புலிகளின் எம்.ரி சொய்சின் எண்ணைக்கப்பலை வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டபோது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முன்று கடற்கரும்புலிகள்!!

சாமாதானம் என்ற போர்வையில் சிறிலங்கா கடற்படையின் யுத்த நிறுத்த மீறலால் சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003 அன்று விடுதலைப்புலிகளின் எம்.ரி சொய்சின் எண்ணைக்கப்பலை வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டபோது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முன்று கடற்கரும்புலிகள் உட்பட ஏனைய கடற்புலி மாவீரர்களின் வீரச்சாவு சம்பவம் பற்றிய விளக்கம்...!

 தாயக தேசத்திற்கு பலம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையை பல வழிகளில் துரிதப்படுத்த தேசியத் தலைவரின் ஒவ்வொரு சிந்தனைக்கும் கடற்புலிகளின் விநியோக அணி செயற்பட்டு வந்தது.
இந்த நடவடிக்கையில் எமது போராளிகளின் தியாகம்,விடுதலை உணர்வு,அயராத உழைப்பு வெளியில் தெரியாத விசித்திரமாகவே இருந்து வந்துள்ளது.

இந்தோனேசியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு படகுகளை  தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பிலிருந்த போராளிகளுக்கு  பணிக்கப்பட்டிருந்தது அதற்கமைவாக மாவீரரான லெப்.கேணல் வெற்றியரசன்( ஸ்ரிபன்) அவர்கள் தலைமையிலான கப்பல்  ஒருபடகையும்
மேஐர் நிர்மலன் தலைமையிலான கப்பல் இன்னொருபடகையும்  என பொறுப்பெடுத்தது அதன்படி லெப்.கேணல் ரஞ்சன் தலைமையிலான கப்பலின் இழப்பிற்க்குப் பின் நடக்கும் முதல் விநியோகம் என்பதால் மிகவும் அவதானத்துடன் இந் நடவடிக்கை இடம்பெற்றது .இந்நடவடிக்கையானது ஸ்ரிபன் தான் கொண்டு செல்லும் படகை கரையிலிருந்து இருநூற்றம்பது மையிலில் தூரத்தில் வைத்து நிர்மலனிடம் கொடுக்க
நிர்மலன் அந்த இருபடகுகளையும் முல்லைத்தீவு கடலிலிருந்து இருநூறு கடல்மைல் தூரத்தில் அப்படகுகளை விட  அப்படகுகள்  கடற்புலிகளின் கடற்சண்டைப்படகுகளின் துணையுடன் அப்படகுகள் தமிழீழத்தை வந்தடையும் இதுவே திட்டமாகும்.திட்டத்திற்கமைவாக முதலாவதாக நிர்மலனின் கப்பல் படகுகளை விடவேண்டிய இடத்திற்க்குப் தனது படகுடன்  புறப்பட அதன் பின் இரண்டாவது நாள் ஸ்ரிபனது கப்பல் தனது படகுடன் புறப்பட்டது .புறப்பட்ட அன்றிரவு மூன்று
கப்பல்கள் சுமார் நான்கு கடல்மைலகள் தூரத்தில்  கிடையாக வேகமாக சென்றதை ஸ்ரிபனது கப்பலிலிருந்தவர்கள் ராடர் மூலமாக கண்காணித்தனர். இருந்தாலும் இரவென்பதாலும் கப்பல்களின் போக்குவரத்துப் பாதையென்பதாலும் இவர்கள் அக்கப்பல்களைக் கருத்திலெடுக்காமல் தங்களது பயனத்தைத் தொடர்ந்தனர்.14.06.2003அன்று அதிகாலை  கடற்படைக்கப்பல்கள்
நிர்மலனின் கப்பலை வழிமறிக்க இத்தகவல்களை உடனடியாக ஸ்ரிபனுக்கு நிர்மலன் கூற ஸ்ரிபன் தனது கப்பலை சர்வதேச கப்பல் பாதையில் சென்றார்.நிர்மலனது கப்பல் கூட்டி வந்த படகில் லெப்.கேணல் தென்னவனுடன்  இன்னொரு போராளியும் உடனிருந்தார் . இவ் இக்கட்டான சூழலில்  நிர்மலனின் கப்பலிலிருந்த லெப் கேணல் வீரமனி கப்பலிலிருந்து படகை கட்டியிளுத்து வந்த கயிற்றை வெட்டி இம்முற்றுகையிலிருந்து தப்புமாறு பணித்தான் .படகில் முற்றுகையை விட்டுத் தப்ப முயற்சித்தபோதும் கடற்படைக்கப்பல்கள் விடவில்லை இருந்தாலும் ஒருகட்டத்தில் கடற்படைக் கப்பலை மோதுவதைப்போல படகிலிருந்தவர்கள் முயற்சித்தபோது கடற்படைக்கப்பல்கள் விலகின அம் முற்றுகையிலிருந்து படகும் வெளியேறியது .அந்நேரம் சமாதானச் சூழல் என்பதால் இவர்களை மீட்கப்  பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது .ஒருகட்டத்தில் கப்பலிலிருந்தவர்களுடன் தொடர்பிலிருந்த தென்னவன்
கப்பலுக்கு வரவா எனக் கேட்க கப்பலுக்கு கட்ற்படைகப்பல்கள் தாக்குதல் மேற் கொள்கின்றன வரவேண்டாம்   நீங்கள் தப்புங்கோ என்றவுடன்  கப்பலிலிருந்தவர்களுடன் படகிலிருந்தவர்களின் தொடர்பும் துண்டிக்கப் படுகிறது.பேச்சுவார்த்தைகள் பயனின்றிப் போக நீண்ட கடலனுபவம் கொண்ட போரளிகள்  பதினொருவரும் நாட்டுப்பற்றாளர் ஒருவருமாக கடலிலே காவியமானார்கள்.லெப் கேணல் தென்னவனின்  படகு அன்றிரவு ஸ்ரிபனி
ன் கப்பலால் மீட்கப்படுகிறது.

இந்நடவடிக்கையில் செவ்வனவே பங்காற்றி
வெவ்வேறு கடற் சம்பவங்களில் எதிரியோடு சமராடி கடலிலே காவியமான.
லெப் கேணல் ஸ்ரிபன்
வீரச்சாவு .17.09.2006
லெப் கேணல் தென்னவன்.
வீரச்சாவு .28.02.2007   ஆகியோரையும் இந்நாளில் நினைவு கூறுவதோடு இலங்கை இனவாத அரசின் தமிழ் மக்கள் மீதான பொருண்மீகத் தடைகளை கடலில் விநியோக நடவடிக்கை மூலம் நிவர்த்தி செய்து இந்தப் பணியில் வீரகாவியமான கடற்புலிப்போராளிகள்,கடற்கரும்புலிகள்,நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.