உலக பயங்கரவாதத்தை தோற்கடிக்க கூட்டு முயற்சிதேவை– மைத்திரி!

உலகளாவிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 5வது மாநாடு தஜிகிஸ்தானின் துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘ஆசியாவின் செல்வாக்கை அடக்க வேறு எந்த வெளி சக்திகளையும் அனுமதிக்கக்கூடாது.

பிராந்தியத்தின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் தவிர, உலகளாவிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்காக சி.ஐ.சி.ஏ உறுப்பு நாடுகளின் தலைவர்களை கூட்டாக சேர்ந்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.