சர்வதேச யோகா தின நிகழ்வு: பயிற்சியில் அமைச்சர்கள்!!

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று 05ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வு நடைபெற்றுள்ளது.


இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் யோகாவுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் மக்கள், அதன் பெரும் நன்மைகளை ஏற்றுக் கொண்டுள்ளதுடன், யோகாவை தங்களது வழமையான நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, தங்களது நாளாந்த வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கொண்டு வந்துள்ளனர் என இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, கயந்த கருணதிலக்க மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததோடு, யோகா பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் நூற்றுக்கும் அதிகமான யோகா ஆர்வங் கொண்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.