தொடரும் மதகுருமார்களின் உண்ணாவிரதப் போராட்டம் !!

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது.


உடல்நிலை மோசமடைந்துள்ள அவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில், தேரரின் உடல் நிலை நேற்றிரவு மோசமடைந்ததையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.