பாகிஸ்தானில் வலைத்தள கட்டுரையாளர் குத்திக் கொலை!
பாகிஸ்தானில் இனந்தெரியாதவர்களால் கடத்தி செல்லப்பட்ட வலைத்தள கட்டுரையாளரான முகமது திலால் கான் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்த பிரபல வலைத்தள கட்டுரையாளர் முகமது திலால் கான். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவராக அவர் இருந்து வந்தார். அவரை ‘பேஸ்புக்’ வலைத்தளத்தில் 16 ஆயிரம் பேரும், டுவிட்டரில் 22 ஆயிரம் பேரும் பின்தொடர்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்று காலை முகமது திலால் கானின் கைத்தொலைபேசிக்கு அநாமதேய அழைப்பு ஓன்று வந்தது. அதில் பேசிய நபர் முகமது திலால் கானை குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி அழைத்தார்.
அதன்படி அவர் தனது நண்பரை அழைத்துக்கொண்டு குறிப்பிடப்பட்ட இடத்துக்கு சென்றார். அங்கு தயார் நிலையில் இருந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி முனையில் அவர்கள் இருவரையும் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர்கள் முகமது திலால் கானை கத்தியால் குத்தி கொலை செய்தனர். அவரது நண்பரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
எனினும், அவர் படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில், பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று முகமது திலால் கானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாக்கிஸ்தான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்த பிரபல வலைத்தள கட்டுரையாளர் முகமது திலால் கான். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவராக அவர் இருந்து வந்தார். அவரை ‘பேஸ்புக்’ வலைத்தளத்தில் 16 ஆயிரம் பேரும், டுவிட்டரில் 22 ஆயிரம் பேரும் பின்தொடர்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்று காலை முகமது திலால் கானின் கைத்தொலைபேசிக்கு அநாமதேய அழைப்பு ஓன்று வந்தது. அதில் பேசிய நபர் முகமது திலால் கானை குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி அழைத்தார்.
அதன்படி அவர் தனது நண்பரை அழைத்துக்கொண்டு குறிப்பிடப்பட்ட இடத்துக்கு சென்றார். அங்கு தயார் நிலையில் இருந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி முனையில் அவர்கள் இருவரையும் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர்கள் முகமது திலால் கானை கத்தியால் குத்தி கொலை செய்தனர். அவரது நண்பரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
எனினும், அவர் படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில், பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று முகமது திலால் கானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாக்கிஸ்தான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை