ஆளுநர் வவுனியா வருகை - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

வவுனியாவிற்கு இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் சென்றுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தியாவின் நிதி உதவியில் வவுனியா செக்கட்டிப்புலவு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டிடத்திறப்பு விழாவில் ஆளுனர் கலந்து கொண்டிருந்தார்.

இதற்காக பாடசாலை வளாகத்தைசச்சுற்றி பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததோடு, நிகழ்வுகள் இடம்பெறும் பகுதியைச் சுற்றி பொலிஸ் மோப்ப நாயுடன் தேடுதல்களும் இடம்பெற்றது.

இதனால் அப்பகுதி மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் பெரிதும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.