அமெரிக்காவில் துப்பாக்கி சூடு!!


அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியிலுள்ள மாநாகரசபைக்கு சொந்தமான அரச கட்டத்திலேயே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட ஆயுததாரி பொலிஸாரினால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்த 6 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.