ஈராக் நீதிமன்றில் கனேடியருக்கு சிறைத்தண்டனை!!

கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள கனேடியர் ஒருவருக்கு ஈராக்கில் 26 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கனேடியரான ஃபாரூக் கலீல் முகமது (51) கடந்த 2009 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டு நிரப்பிய லொறியை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதில் மூளையாக செயல்பட்டுள்ளார்.

ஈராக்கின் மொசூல் நகரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம் அருகே முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில், அமெரிக்க இராணுவத்தினர் ஐவரும், ஈராக்கிய பொலிசார் இருவரும் உயிரிழந்தனர்.

ஃபாரூக், கனடாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் தீவிரவாத கொள்கைகள் கொண்ட குழு ஒன்றுடன் இணைந்து இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் நடைபெற்றுவந்த நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும், அவரது தரப்பு வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.