இலங்கையர்ஒருவர் இத்தாலி விபத்தில் உயிரிழப்பு!

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான துஷார சஞ்சீவ பெரேரா என்ற இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இலங்கையர் பயணித்த மோட்டார் வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீதியில் வாகனத்தை நிறுத்திய போது பின்னால் வந்த பேருந்துடன் மோதியமையினாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இலங்கையர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.