ராஜபக்சக்களின் தலைமையில் புதிய அரசாங்கம்- கனக ஹேரத் !!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மூன்று கோபுரங்களின் மத்தியில் ஆட்சியை முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே இந்த மூன்று கோபுரங்களாவர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கு மஹிந்த தலைமை தாங்கும் அதேவேளை, தேசிய பாதுகாப்பு கோத்தபாயவிடமும், பொருளாதாரம் பசில் ராஜபக்சவிடமும் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலத்தில் நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் இந்த மூன்று பேரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை