கடலில் மூழ்கி தந்தை, இரு மகள்மார் பரிதாபமாக மரணம்!!

கிரிந்த கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் தந்தை மற்றும் இரண்டு மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட சென்ற குடும்பத்தினர் கடல் அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போது தந்தையும் ஒரு மகளும் பலியானதுடன் தாயும் மற்றுமொரு மகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


எனினும் சிகிச்சை பலனின்றி மற்றைய மகளும் உயிரிழந்துள்ளார்.
பாதிப்படைந்த தாய் மேலதிக சிகிச்சைக்களுக்காக ஹெலிகொப்டர் உதவியுடன் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளார்.இந்த அனர்த்தம் காரணமாக ஹட்டன் பகுதியை சேர்ந்த 42 வயதான விஜேசூரிய என்பவரின் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு மற்றும் நான்கரை வயதுடைய பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி நுவரெலியாவிலுள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் கடந்த வெள்ளி கிழமை வங்கியில் பணி புரியும் ஊழியர்களுடன் யால பகுதிக்கு சுற்றுலா சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.