இன்றுமுதல் போதை ஒழிப்புவாரம் ஆரம்பம்!!

இன்று முதல் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு இலங்கையில் பல்வேறுப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்களுக்கு அடிமையான சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தற்போது தண்டனை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விஷேட பொறுப்பாக கருதி செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த வாரம் காவற்துறையினர் மற்றும் முப்படையினர் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விஷேட சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.