தாய்நாடு திரும்ப விரும்பும் ஐ.எஸ் போராளி!

ஜிஹாதி ஜெக் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த இஸ்லாமிய அரசு அமைப்பு போராளி என சந்தேகிக்கப்படும் ஜெக் லெட்ஸ் நாடு திரும்ப விரும்புவதாக கூறியுள்ளார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட ஜெக் லெட்ஸ் இப்போது சிரியாவில் உள்ள சிறையில் குர்திஷ் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இவருக்கு பண உதவி அளித்த குற்றச்சாட்டில் ஜெக்-இன் பெற்றோருக்கு கடந்த வாரம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்கை செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜெக்

நான் நாடு திரும்ப விரும்புகிறேன். ஆனால் அது இலகுவான விடயமில்லை என எனக்கு நன்கு தெரியும். பிரித்தானிய மக்களை வெடிகுண்டு வைத்து கொல்லும் எண்ணம் எனக்கில்லை.

நான் செய்த குற்றத்துக்கு எனது பெற்றோர் தண்டனை அனுபவிக்கக்கூடாது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. அவர்கள் எனக்கு தான் பணம் அனுப்பினார்கள். தீவிரவாத அமைப்புக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.