கிளிநொச்சியில் புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் கோரவிபத்து!!

கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் குறைந்தது ஐவர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுவதாக தெரிகின்றது.
கொழும்பிலிருந்து பயணித்த கடுகதி ரயிலுடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கனரக வாகனத்தில் பயணித்த இராணுவ வீரர்களே உயிரிழந்துள்ளனர்.

ஆறு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 4 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.