இலஞ்சம் பெற்ற உத்தியோத்தருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!!

திருகோணமலை, வெருகல் பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் குறித்தநபரை இன்று ஆஜர்படுத்திய போதே அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் லெப்பை வீதி, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் வெருகல் பிரதேச செயலகத்தில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான கடமைகளை மேற்கொண்டு வந்த நிலையிலே பெண்ணொருவரிடம் 2000 ரூபாயினை இலஞ்சமாக பெற்றுள்ளார்.

அப்பெண் பிரதேசசெயலாளரிடம் தெரிவித்ததையடுத்து பிரதேசசெயலாளர் சேருநுவர பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார். இதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.