கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு -யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் புங்கன்குளம் புறூடி வீதி பகுதியிலுள்ள வெற்றுக்காணியில் இருந்து வெடிபொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


குறித்த வெற்றுக்காணியில் உள்ள பாழடைந்த கிணற்றை இன்று (வியாழக்கிழமை) காணி உரிமையாளர்கள் சுத்தம் செய்யும்போதே கிணற்றுக்குள் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குறித்த கிணற்றிலிருந்து பழுதடைந்த மிதிவெடி, ஆட்லெறி செல் உள்ளிட்ட வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

அதன்பின்னர் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை அழிப்பது குறித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன், வெடிபொருட்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த விசாரணையின் பின்னர், விசேட அதிரடிப் படையினர் நீதிமன்றத்தின் அனுமதியுடன், வெடிபொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.