யாழில் இரு குழுக்களுக்கிடையில் கடும் மோதலில்2 பெண் உட்பட 9 பேர் படுகாயம்!!

யாழ்ப்­பா­ணம், சுன்­னா­கம் சபா­ப­திப்­பிள்ளை முகாம் பகு­தி­யில் இரு குழுக்­க­ளின் இடையே ஏற்­பட்ட மோத­லால் வெட்­டுக் காயங்­கள் மற்­றும் அடி காயங்­க­ளு­டன் 9 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். குறித்த முகா­மில் வசிப்­ப­வர்­க­ளி­டையே நேற்­றை­ய­தி­னம் நில­விய மோதல் கார­ண­மா­கவே குறித்த வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. குறித்த பகு­தி­யில் வலி.வடக்­குப் பகு­தி­யில் இருந்து இடம்­பெ­யர்ந்­த­வர்­கள் தங்­கி­யுள்­ள­னர். வெட்­டுக் காயங்­க­ளுக்கு இலக்­கா­ன­வர்­கள் தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளில் 7 ஆண்­க­ளும் 2 பெண்­க­ளும் அடங்­கு­கின்­ற­னர். மேல­திக விசா­ர­ணை­களை பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.