வீதியைக் கடந்த மாணவிகள் மீது ஏறி, இறங்கிய பாரவூர்தி!🎥

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் எதிலிவெவ மகா வித்தியாலயத்திற்கு அருகில் வீதிக் கடவையில் நேற்றுக் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.அதிக வேகத்தில் வந்த பாரவூர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் வீதிக்கடவையில் வீதியை கடக்க முற்பட்ட மாணவிகள் மீது மோதியுள்ளது.இதன் போது, மேற்படி பாடசாலையின் ஊழியரொருவரும் விபத்துக்குள்ளாகியுள்ளார்.இவர்கள் வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது காவற்துறை சேவையில் ஈடுபடாமை மற்றும் சாரதிக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரி பொதுமக்கள் அப்பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.