யேர்மன் தலைநகரில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு!!📷

தமிழின அடையாளத்தை பாரெங்கும் பரவச் செய்வோம் - யேர்மன் தலைநகரில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு


நேற்றைய தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் கலந்துகொண்டு தமது அடையாளத்தையும் , பாரம்பரிய கலையையும் வெளிப்படுத்தி தனக்கான தனித்தன்மையை தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் பவனி வந்தனர்.


ஒரு மில்லியன் பார்வையாளர்களின் மத்தியில் ஈழத்தமிழர்கள் பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டாம்,  பாவைக் கூத்து , காவடி , சிலம்பாட்டம் , மாடு ஆட்டம், பறை இசைத்தல் என   தமது   பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினர்.

பழமை வாய்ந்த தமிழர் பாரம்பரிய கலைகளை பல்லின மக்கள் ஆர்வமாக பார்வையிட்டதோடு   மட்டும் அல்லாமல் தம்மையும் இணைத்துக்கொண்டு  மகிழ்ச்சியடைந்தனர்-


ஈழத்தமிழர்களின்  நிகழ்ச்சி பேர்லின் தொலைக்காட்சியிலும் சிறிய தொகுப்பாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.