மட்டக்களப்பு காரைதீவில் இருவர் மீது கத்திக்குத்து !!
இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் காரைதீவு வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குடும்ப தகராறு காரணமாக குறித்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வடிவேல் வீதி காரைதீவு 12ல் வசிக்கும் ஒரு பெண்பிள்ளையின் தந்தையான ஞானசேகரம் ரதாஸ் (27வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக காரைதீவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை